செப்டெம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை! பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Police Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination Sri Lanka Government Gazette
By Mayuri Sep 08, 2024 03:48 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி (காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை) கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை

இது தொடர்பான  சுற்றறிக்கை  அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை! பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை | Requests Made By The Department Of Examinations

புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2849 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை நடைபெறவுள்ளதுடன், 3,23,879 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW