பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க விற்பனையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, மே மாதம் 23ஆம் திகதி முதல் புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 500 ரூபா முதல் 1000 ரூபா அளவில் பாடசாலை புத்தக பைகள் மற்றும் பாதணிகள் என்பனவற்றின் விலைகளை குறைப்பதற்கு இணங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் நேற்றைய தினம் நிதி இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளனர்.
அமைச்சரின் கோரிக்கை
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து விலைகளை குறைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
உற்பத்தி மூலப் பொருட்களின் விலைகள் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நலனை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார்.