நாட்டில் சில பொருட்களுக்கு வரி விலக்கு: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (06.09.2023) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
විශේෂ අවශ්යතා ඇති පුද්ගලයින් භාවිතා කරන උපකරණ සහ දේශිය සහල් නිෂ්පාදනය සමාජ ආරක්ෂණ බද්දෙන් නිදහස් කෙරේ.
— Ranjith Siyambalapitiya (@RanjithSiyam) September 6, 2023
- මුදල් රාජ්ය අමාත්ය රංජිත් සියඹලාපිටිය#SriLanka #SriLankan #LKA #RanjithSiyambalapitiya
வரி விலக்கு
இதனடிப்படையில், விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளது.
அத்துடன் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.