குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Rusath Jul 08, 2024 01:28 PM GMT
Rusath

Rusath

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் திங்கட்கிழமை(08.07.2024) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸார் விசாரணை

குருக்கள்மடம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு | Recovery Of Dead Body Of A Woman

இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், குறித்த நபவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும்,  சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGallery