போருக்கு தயார்: ரஷ்யாவின் நகர்வுக்கு போலந்து விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்யா இடையிலான முறுகலானது நீடித்துவரும் நிலையில் போலந்து மீதான போர் அச்சுறுத்தலுக்கு எங்கள் நாடு தயாராக உள்ளது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விளாடிசா கோனேக் காமிஸ் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
போலந்து பாதுகாப்பு அமைச்சர் கோனேக் காமிஸ், செய்தியாளர்களை சந்தித்த போதே குறித்த விடயத்தை சுட்டிக்காட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அச்சுறுத்தலுக்கான வாய்ப்பு
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் சூழலில் போலந்துக்கு எதிரான ரஷ்யாவின் நகர்வு போர் அச்சுறுத்தலாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், போலந்துக்கு எதிரான அனைத்து நிலைப்பாடுகளுக்கும் நான் தயாராக உள்ளேன். இன்று எமது நாடு இருக்கும் சூழ்நிலையில் ஒரு பாதுகாப்பு அமைச்சரின் பணி அதுவாகத்தான் இருக்கும்.
இதனை வெறும் வார்த்தைகளால் மாத்திரம் நான் சொல்லவில்லை.
இதன்படி போலந்து இராணுவம் போர் அச்சுறுத்தலுக்குத் தயாராகும் உறுதியான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
மேலும், பாரிய அளவிலான ஆயுதக் கொள்முதல் மிகவும் முக்கியமானது என்றாலும், ஒவ்வொரு இராணுவ வீரருக்கான தனிப்பட்ட பயிற்சிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |