ரவூப் ஹக்கீமின் முக்கிய சகா கட்சி தாவல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Kalmunai Sri Lanka Presidential Election 2024
By Rukshy Sep 08, 2024 05:16 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் நான் எதிர்பார்த்த நேர்மையான, ஊழலற்ற ஒரு தலைவரான அநுரவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

கட்சியின் உறுப்புரிமை

தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினராகவும், அக்கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராகவும் பதவி வகித்த நான், அக்கட்சியில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தம் விலகிக் கொள்வதாக கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்துவிட்டு இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.

ரவூப் ஹக்கீமின் முக்கிய சகா கட்சி தாவல் | Rauff Hakeems Main Peer Party Tab

2015ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக செயற்பட்ட நான் சென்ற இரு வருடங்களாக அக்கட்சியின் எந்தவொரு கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறான அரசியல் சூழலில் ஏன் நான் தீடிரென அக்கட்சியிலிருந்து விலக வேண்டும் என நீங்கள் நினைக்கக்கூடும்.

இத்தேசம் சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டது. இந்த 7 தாசப்தத்திலும் இந்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களினால் இந்நாடும் மக்களும் நன்மைடையவில்லை. நன்மையடைந்தவர்கள் யார் என்பதை இந்நாடு அறியும்.

புதியதோர் அரசியல் கலாசாரம்

இவ் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும். ஆனால், இன்னுமே மாற்றங்கள் ஏற்படவில்லை.இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 9வது ஜனதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்மேன்பது எனது ஆசை மட்டுமல்ல நீதியையும், நியாயத்தையும், சமத்துவத்தையும், சம உரிமையையும் விரும்புகின்றவர்களின் அவாவும் அதுவாகவே இருக்கக் கூடும்.

ரவூப் ஹக்கீமின் முக்கிய சகா கட்சி தாவல் | Rauff Hakeems Main Peer Party Tab

அது மாத்திரமின்றி ஊழல், மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகமற்ற ஆட்சியாளர்களினால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக இலங்கை மிளிர வேண்டும். அதற்கோர் புதிய சக்தி அவசியம். அச்சக்தி தேசிய மக்கள் சக்தியிடம் காணப்படுவதை நான் காண்கின்றேன்.

அத்தோடு, தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள கோட்பாடுகளும் அதற்கான செயற்பாடுகளும் இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது”  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

அடுத்த வாரத்திற்குள் இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி

அடுத்த வாரத்திற்குள் இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW