வக்பு சொத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய சட்டத்திருத்தம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட தகவல்
வக்பு சொத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய சட்டத்திருத்தம் பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆலோசிக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தில் வசதி படைத்தவர்களினால் தமது மரண ஈடேற்றத்திற்காக சமூகம் நோக்கம் கருதி அன்பளிப்பு செய்யப்படுகின்ற சில வக்பு சொத்துக்கள் சரியான பரிபாலனம் இல்லாமல், சீரழிக்கப்படுவதும் தவறாக பயன்படுத்தப்படுவதும் கவலைக்குரிய விடயமாகும்.
ஆகையினால் வக்பு சொத்துக்கள் உரிய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.