மரண அபாயத்தில் ரணில் : நீதிமன்றில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து வாதாடிய வழக்கறிஞர்

Colombo Hospital Ranil Wickremesinghe Arrested
By Sumithiran Aug 28, 2025 10:28 AM GMT
Sumithiran

Sumithiran

 பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,மரண அபாயத்தில் இருப்பதாக ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு அவருக்கு ஜாமீன் பெற பல குறிப்பிட்ட உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

நோய்கள் தொடர்பான மருத்துவ அறிக்கைகள்

அந்த நேரத்தில், ரணில் விக்ரமசிங்கவின் அனைத்து நோய்கள் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன, மேலும் அவரது இதயத்தில் உள்ள 4 முக்கிய தமனிகளில் 3 அடைபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

மரண அபாயத்தில் ரணில் : நீதிமன்றில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து வாதாடிய வழக்கறிஞர் | Ranil Still In Intensive Care Unit

இதய திசுக்களின் மரணம் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மருத்துவ நிலைமைகள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையிலேயே அவரின் மருத்துவ நிலைமைகளை சுட்டிக்காட்டி நீதவான் பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!