ரமழான் நோன்பு பற்றிய சந்தேகங்களுக்கான சரியான விளக்கமும்!
ரமழான் நோன்பு கடைப்பிடிப்பது ஒவ்வொரு இஸ்லாமியருக்குக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து ஒழுக்கங்களில் ஒன்றாகும். ரமழான் நோன்பு காலத்தில் மக்காவிற்குப் புனித பயணம் மேற்கொள்வதை ஏராளமானோர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பிறையை அல்லது சந்தினை அடிப்படையாகக் கொண்டு ரமழான் மாதம் கணக்கிடப்படுகிறது.
அப்படிப்பட்ட ரமழான் நோன்பு பற்றிய சந்தேகங்களுக்கான சரியாக அறிந்து கொள்ளலாம்
ரமழான் என்றால் என்ன ...!
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் ரமழான் ஆகும். இஸ்லாமியர்கள் புனித மாதமாகப் போற்றும் இந்த மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடித்தும், திருக்குரான் ஓதியும், தானங்கள் செய்வதும் வழக்கம். ரமலான் நோன்பு கடைப்பிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று.
ரமழான் நோன்பு விதிகள் எவை ...!
ரமழான் மாதம் முழுவதும் சூரிய உதயம் ஆரம்பமாகி, சூரிய அஸ்தமனம் வரை உணவு, தண்ணீர் ஏதும் எடுத்துக் கொள்ளாமல் தொழுகை, இறைச் சிந்தனை, மற்றவர்களுக்கு உதவுதல், மக்காவிற்குப் புனித பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றையே முக்கிய கடமையாகக் கொண்டு இருப்பார்கள்.
ரமழான் மாதத்தில் இஸ்லாமியர் நோன்பு கடைப்பிடிப்பது ஏன் ...!
சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, வசதி இல்லாதவர்களுக்கு உதவுவது, இறை வழிபாட்டில் ஈடுபடுதல், திருக்குர்ஆன் ஓதுதல், பெருந்தன்மை மற்றும் பொறுமையை கடைப்பிடித்தல், இறைவனுடனான உறவினை பலப்படுத்திக் கொள்ளுதல், குர்ஆனில் சொல்லப்பட்ட நெறிகளின் வழி நடப்பது ஆகியவற்றை வலியுறுத்துவதே இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பதன் நோக்கமாகும்.
இப்தார் (iftar) என்றால் என்ன...!
ரமழான் நோன்பு இருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் மாலையில் சூரியன் மறைந்த பிறகு உணவு எடுத்துக் கொள்வார்கள். நோன்பு துறக்கும் போது அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவிற்கு இப்தார் என்று பெயர். பெரும்பாலும் நண்பர்கள், குடும்பத்தினர்கள் ஆகியோர் ஒன்று கூடி நோன்பு துறப்பார்கள்.
2023 இல் ரமழான் நோன்பு ஆரம்பித்து, நிறைவு செய்யும் திகதி...!
2023ஆம் ஆண்டில் மார்ச் 22 அன்று பிறை தெரியாததால், மார்ச் 24 முதல் ரமழான் மாதம் ஆரம்பிப்பதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் திகதி வரை ரமழான் நோன்பு கடைப்பிடிக்கப்படவுள்ளது. பிறை தென்படுவதைப் பொறுத்து இந்த நாள் மாறுபடலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ரமழான் நோன்பின் போது தவிர்க்க வேண்டியவை...!
பகல் பொழுதுகளில் உணவு, தண்ணீர், புகைபிடித்தல், உடல் இன்பங்கள், சுக போகங்கள் ஆகியவற்றை ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் காலத்தில் தவிர்க்க வேண்டும். மாறாகத் தொழுகை, இறைச் சிந்தனை, தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டும். ரமழான் - ஈத் (ரம்ஜான்) இரண்டிற்கும் என்ன வேறுபாடு ? ரமழான் என்பது நோன்பு பிடிக்க வேண்டிய இஸ்லாமிய மாதம். ஈத் அல்லது ரம்ஜான் என்பது ரமழான் மாதத்தின் நிறைவாகக் கொண்டாடப்படும் பண்டிகை. சிறப்புத் தொழுகை, விருந்து, பரிசுகளைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
எவ்வளவு நேரம் ரமழான் நோன்பு இருக்க வேண்டும்...!
சூரிய உதயம் ஆரம்பித்து, சூரிய அஸ்தமனம் வரையிலான காலத்தில் ரமழான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டும். நோன்பு இருக்கும் நேரமானது இருக்கும் இடம் மற்றும் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏற்ற போல் மாறுபடும். உதாரணமாக 2023இல் நோன்பு கடைப்பிடிக்கும் நேரம் என்பது 12 முதல் 18 மணி நேரமாக இருக்கும். இதுவும் ஒவ்வொருவரும் வாழும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும்.
ரமழான் நோன்பு கடைப்பிடிப்பதால் என்ன பலன்...!
ரமழான் நோன்பு கடைப்பிடிப்பதால் உடலுக்கும், மனதிற்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. ரமழான் நோன்பு இருப்பதால் ஆன்மா தூய்மை அடைகிறது, சுய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு மேம்படும், அல்லாஹ் உடனான உறவு பலப்படும். உடல் ரீதியாக இரத்த சர்க்கரை அளவானது கட்டுப்படும், தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்படும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று நோன்பினை ஆரம்பிக்கலாம்.