நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழையுடனான காலநிலை

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Aug 19, 2024 02:16 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர்

பலத்த காற்று 

இந்நிலையில், மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழையுடனான காலநிலை | Rainy Weather Continue Many Parts Of Country

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சஜித்திற்கு விசேடமாக நன்றி தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் : அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

சஜித்திற்கு விசேடமாக நன்றி தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் : அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

ரணிலை ஆதரிக்கப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு

ரணிலை ஆதரிக்கப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW