பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Jun 17, 2025 03:17 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த விடயத்தினை இன்றைய தினம்(17) அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.

இதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரையிலான கனமழை பெய்யக்கூடும்.

உலகையே ஆச்சரியப்படுத்த தயாராகும் ஈரான் : வெளியான காணொளி

உலகையே ஆச்சரியப்படுத்த தயாராகும் ஈரான் : வெளியான காணொளி

முன்னெச்சரிக்கை

வடமேல் மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

அதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல் | Rain Wind Alert In Provinces

அத்தோடு, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

இந்நிலையில், தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சத்தியப்பிரமாண நிகழ்வு குறித்து வெளியான அறிவிப்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சத்தியப்பிரமாண நிகழ்வு குறித்து வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW