பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

Sri Lanka Government Gazette New Gazette
By Mayuri Sep 13, 2024 12:48 PM GMT
Mayuri

Mayuri

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனமாக 1,350 ரூபாவை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

3 வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும் தீர்மானம்

அதேநேரம், மேலதிக தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் | Publication Of Daily Minimum Wage Gazette

அத்துடன் கடந்த 10ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 வருடங்களுக்கு இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்குமென வேதன நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்டதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery