சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

Missing Persons Kilinochchi SL Protest
By Aadhithya Jun 30, 2024 03:15 PM GMT
Aadhithya

Aadhithya

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டமானது இன்று (30) காலை 10 மணி முதல் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக அரை மணித்தியாலங்கள் வரை A9 வீதியில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நீதி

இதன்போது சர்வதேச நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் தாங்கியவாறும் அவர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் | Protest For Missing Persons In Kilinochchi

மேலும், தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி தேவை, பொது வேட்பாளராக சரியான ஒருவர் நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery