மட்டக்களப்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது

Batticaloa Eastern Province Prisons in Sri Lanka
By Rukshy Jul 02, 2024 05:01 AM GMT
Rukshy

Rukshy

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (1) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் முன்னிலை

சம்பவதினமான நேற்று இரவு சிறைச்சாலையில் கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை சிறைக்காவலர் சோதனையிட்ட போதே அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டுள்ளதுடன் குறித்த நபரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மட்டக்களப்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது | Prison Officer Was Arrested In Batticaloa

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW