தேசிய அரசாங்கத்திற்கான புதிய அழைப்பு குறித்து வெளியான தகவல்
ஏப்ரல் 25ஆம் திகதி சர்வதேச நாணய நிதி வசதி உடன்படிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது, தேசிய அரசாங்கத்திற்கான புதிய அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அழைப்பு
இந்த யோசனைக்கு ஆதரவளிக்க அனைத்து எதிர்க்கட்சியினருக்கும் அன்றைய தினம் புதிய அழைப்பு விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கும் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை பதிலளிக்காததால், தாம் இருவரும் அந்த யோசனையை கைவிட நேரிட்டதாகவும் மனோ கணேஷன் கூறியுள்ளார்.
பிரதமர் பதவி
எனினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை
வழங்குவதாக ஜனாதிபதி தகவல் அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான அனைத்து
செய்திகளும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.