தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம்

Tamils Trincomalee Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 04, 2024 10:55 AM GMT
Laksi

Laksi

நாட்டில் வாழும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு இதுவரையில் எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, காலத்துக்கு காலம் வந்த ஜனாதிபதிகள் தனது காலத்தில் இனப்பிரச்சினைக்கு  நியாயமான தீர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கியும் தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவரால் இன்று (4) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

தமிழ் மக்களுக்கான தீர்வு

மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியான ஏமாற்றமே எஞ்சி வந்தது. எனவே தமிழ் மக்கள் நியாயமான தீர்வு வழங்குவார் என்ற நம்பிக்கையுள்ள புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க முன் வர வேண்டும்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம் | President Election Sri Lanka Tamils

இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதும் பொருத்தமற்றது. ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரால் வெற்றி பெறவே முடியாது என்பது நிதர்சனமாகும்.

இப்படி ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களது ஆதரவு இல்லாமல் ஒரு ஜனாதிபதியால் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து சிந்திக்க முடியாத நிலை ஏற்படும் என  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள்

ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW