கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka Crime
By Laksi Aug 04, 2024 09:04 AM GMT
Laksi

Laksi

இரணைத்தீவு கடற்பகுதியில் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (3) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த படகொன்றை நேற்று கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

பொலிஸார் விசாரணை

இதன்போது,  குறித்த படகிலிருந்து 176 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது! | Three Arrested With 170 Kg Of Ganja

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் வலைப்பாடு பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை : எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு

தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை : எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW