ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள்: ரிஷாட் வேண்டுகோள்

Srilanka Muslim Congress Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 26, 2024 04:55 AM GMT
Laksi

Laksi

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் எமக்கு ஏற்பட்டுள்ள வேதனைகள், வலிகள் நீங்கிவிடும் நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களியுங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருதில், சனிக்கிழமை (24) நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

மக்கள் காங்கிரஸின் வளர்ச்சி

அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்தர்ப்பவாத அரசியலுக்கு விலைபோனவர்களை கட்சி ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. எங்களைவிட்டுப் பிரிந்த மூவரையும் துணிச்சலுடன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம். இதேபோன்று, துணிச்சலான முடிவுகளையே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள்: ரிஷாட் வேண்டுகோள் | President Election Sajith Support For Risad

அப்போதுதான், சமூகத் துரோகிகளுக்கு சிறந்த பாடம்புகட்ட மக்கள் முன்வருவர். துரோகிகளை மன்னிப்பது பின்னர், மீண்டும் கட்சியில் இணைப்பது என்பதெல்லாம் கோமாளித்தன அரசியலாகும். மக்கள் மீது நம்பிக்கையுள்ள தலைமைகள், துரோகிகளை தண்டிப்பதற்கு தயங்கப்போவதில்லை. 

சமுதாயத்தை வழிநடத்துவதில் தர்ம வழியில் செல்லும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும். மறைந்த தலைவர் அஷ்ரபின் சிந்தனையிலேயே எமது கட்சியும் இளைஞர்களை வழி நடத்துகிறது.

விடுமுறையின் பின் இன்று முதல் ஆரம்பமாகும் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள்

விடுமுறையின் பின் இன்று முதல் ஆரம்பமாகும் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள்

சஜித்திற்கு வாக்கு

உணர்ச்சிகளுக்கு தமிழ் இளைஞர்கள் அடிமையானதால், நாட்டில் பாரிய யுத்தமே மூண்டது. இது போன்றதொரு நிலைக்கு முஸ்லிம் இளைஞர்கள் சென்றுவிடக்கூடாது. ஒரு சிலரின் தவறுகளைத் தண்டிப்பதற்காக, சமூகத்தையே நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை எடுத்துவிடாதீர்கள்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள்: ரிஷாட் வேண்டுகோள் | President Election Sajith Support For Risad

சஹ்ரான் தலைமையில் பத்து இளைஞர்கள் செய்த தவறுகள் தான், எமது சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கின. இதனால், நானுட்பட எனது குடும்பம், சமூக முன்னோடிகளான சிறந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், மௌலவி ஹஜ்ஜுல் அக்பர், அப்பாவி இளைஞர்கள் மற்றும் எமது தாய்மார்கள் சிறை செல்ல நேரிட்டது.

இவை, இன்னும் வேதனைகளாகவும், காயங்களாகவுமே உள்ளன. சாய்ந்தமருதிலும் இதன் தாக்கமும் எதிரொலியும் உணரப்பட்டது.

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இந்த வலிகள் நீங்கிவிடும். எனவே, எமது தலைமையில் நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்” என்று ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இலட்சக்கணக்கானோர் வாக்களிக்க தகுதி

வன்னியில் இலட்சக்கணக்கானோர் வாக்களிக்க தகுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW