அம்பாறையில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Ampara Anura Dissanayake Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 26, 2024 08:15 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியினரால் அம்பாறை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரங்கள் கடந்த 22 ஆந் திகதி முதல் இன்று (26) வரை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, பெரிய நீலாவணை உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்றும் அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று தமது பிரசாரங்களை முன்னெடுத்தனர்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

அனுரவின் வெற்றி

அத்தோடு, நாடு அனுரவோடு அவரின் வெற்றியில் நாமும் பங்காளியாக இருப்போம். வாரீர் மாற்றத்தை நோக்கி பயணிப்போம் வளமான நாடு அழகான வாழ்க்கை என பிரச்சார துண்டுப்பிரசுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் வீடு வீடாக செயற்பாட்டாளர்கள் விநியோகித்து வருகின்றனர்.

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரம் விநியோகம் | President Election Npp Pamphlet Ampara

தோழர் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றியை இந்த ஜனாதி தேர்தல் பிரச்சாரத்தின் ஊடாக உறுதிப்படுத்த இவ்வாறான செயற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ உட்பட கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

திருகோணமலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுரம்

திருகோணமலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery