மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பம்

Sri Lanka Police Batticaloa Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 04, 2024 08:44 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் (4)  தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மட்டக்களப்பின் பட்டிருப்பு ,கல்குடா ,மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுக்கான தபால்மூல வாக்களிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

கல்குடா தேர்தல் தொகுதியில் 134,104 வாக்காளர்களும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 210,293 வாக்காளர்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மூதூரில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

மூதூரில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களிலும் பிரதான பொலிஸ் நிலையங்களில் இன்றையதினம் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பம் | Postal Voting Started In Battialoa

உதவி தெரிவத்தாட்சி அலுவலர் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பு பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்று வருவதுடன் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டோர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகள் சார்பில் பிரதி நிதிகளும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW