தபால் திணைக்கள ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Sri Lanka Government
Postal Strike
By Rakshana MA
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்கி இயங்க மறுப்போர் தபால் திணைக்களத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கும், பிற அரசு நிறுவனங்களைப் போலவே, கைரேகை இயந்திரங்கள் கட்டாயமாக்கப்படுவதாகவும், தேவையான அளவு கூடுதல் கைரேகை இயந்திரங்கள் அங்கு நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிவப்பு எச்சரிக்கை
அதேவேளை, “பெறும் சம்பளத்திற்கு ஏற்றவாறு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்,” என அமைச்சர் வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |