எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! வெளியான தகவல்

Ceylon Petroleum Corporation Sri Lanka Sri Lankan Peoples Petrol diesel price Fuel Price In World
By Rakshana MA Mar 01, 2025 05:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து சங்கம் விலகியது.

பின்னர் பணம் பெறுவதன் அடிப்படையில் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.

நிந்தவூரில் கரையொதுங்கிய பாரிய தண்ணீர் தாங்கி

நிந்தவூரில் கரையொதுங்கிய பாரிய தண்ணீர் தாங்கி

பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

எனினும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! வெளியான தகவல் | Possibility Of A Gasoline Shortage Across Island

இதற்கிடையில், எதிர்காலத்தில் பெற்றோலிய விநியோகஸ்தர்களுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இதேவேளை நாடு முழுவதும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு

கல்முனையில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை

கல்முனையில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW