ஜூலை மாதம் முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள பொலிஸார்

Sri Lanka Ministry Of Public Security Deshabandu Tennakoon
By Rukshy Jun 26, 2024 08:23 AM GMT
Rukshy

Rukshy

பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இரண்டு மாத கால விசேட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் விடுத்துள்ள பணிப்புரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பாதாள உலகக்குழுக்களை ஒடுக்குவதற்கு ஆயுதப் படைகளின் துப்பாக்கிகள் பாரிய தடையாக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர்

இந்நிலையில், பொலிஸாரின் உதவியுடன் இந்த விசேட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளனர்.  

ஜூலை மாதம் முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள பொலிஸார் | Police Start Special Security Operation From July

எவ்வாறாயினும், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதி நடவடிக்கையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW