அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு
                                    
                    Sri Lanka
                
                                                
                    Government Of Sri Lanka
                
                                                
                    Rice
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது.
தற்போதுள்ள அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.
அரிசி இறக்குமதி
அதன்படி, நேற்று (08) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் வெளியிடப்பட்ட மொத்த அரிசியின் அளவு 115,000 மெட்ரிக் தொன்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அரிசி இறக்குமதி செய்வதற்கான அனுமதி மீண்டும் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |