அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்காக புதிய திட்டம்

By Mayuri Aug 27, 2024 08:52 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை சமூக பாதுகாப்பு சபை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை ஒருவர் தமது சபையில் அங்கத்தவரானதன் பின் அவருக்கான ஓய்வூதியம் தயாரிக்கப்படும் என அந்த சபையின் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ்.பிரசன்ன களுஆரச்சி தெரிவித்துள்ளார்.

பங்களிப்பு ஓய்வூதியம்

அதன்படி, எதிர்வரும் காலங்களில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்காக புதிய திட்டம் | Pension For Employees

இது தொடர்பான மேலதிக தகவல்களை 011-2886 088 அல்லது 076-095-4002 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW