பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக மூதூரில் அமைதி பேரணி

Trincomalee Eastern Province Palestine
By Dev Sep 06, 2025 01:30 PM GMT
Dev

Dev

பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில், திருகோணமலை மூதூரில் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இந்தப் பேரணியை நேற்று வெள்ளிக்கிழமை(05) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஏற்பாடு செய்திருந்தது.

மூதூர் - அக்கரைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமான பேரணி, பிரதான வீதியூடாகச் சென்று, மூதூர் பிரதேச செயலக முன்றலை சென்றடைந்தது.

அமைதிப் பேரணி

அமைதிப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக மூதூரில் அமைதி பேரணி | Peace Rally In Muthur For The Palestinian People

இந்த பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.