புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டிற்கு கிடைக்கவுள்ள கடவுச்சீட்டுகள்

Sri Lanka Passport
By Mayuri Sep 05, 2024 02:06 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் 15ஆம் திகதியளவில் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதியளவில் அதன் முதல் தொகுதியாக 50,000 கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு - குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

அவை கிடைத்தவுடன் தற்போது கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டிற்கு கிடைக்கவுள்ள கடவுச்சீட்டுகள் | Passport Issuing In Sri Lanka

மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு விநியோகம்

அதுவரை நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளை 1000 ஆக மட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

தற்போது தம்வசம் 30,000 கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW