விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
Parliament of Sri Lanka
By Kamal
எதிர்வரும் 20ம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி முற்பகல் 11 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளினதும் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தாண்டின் பின்னர் எதிர்வரும் 25ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வின் போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.