பொதுத் தேர்தல்: மட்டக்களப்பில் செலுத்தப்பட்ட முதல் கட்டுப்பணம்

Batticaloa General Election 2024 Parliament Election 2024
By Laksi Sep 30, 2024 10:36 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

குறித்த கட்டுப்பணமானது அந்த அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (30) செலுத்தப்பட்டுள்ளது.

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

மோசடிகள் அற்ற அரசியல்

இம்முறை தமிழ் உணர்வாளர் அமைப்பின் சார்பாக சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் எட்டுப்பேரை களமிறக்கவுள்ளதாவும் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல்: மட்டக்களப்பில் செலுத்தப்பட்ட முதல் கட்டுப்பணம் | Parliament Election First Bond Paid In Batticaloa

மேலும், ஊழல்கள், மோசடிகள் அற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே தாம் களமிறங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரசாங்க அச்சக அதிகாரி கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery