சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது, இன்று(05) சம்மாந்துறை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ்.அமரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.
அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும்
மேலும், பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்று சூழல் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் என அனைத்தையும் பார்வையிட்டதுடன் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.
அத்துடன், இந்த நிகழ்வில், பொலிஸ் உப பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |