பாகிஸ்தான் அரசாங்கத்தின் புலமைப்பரிசில்! தேர்வு பரீட்சைக்கு திரண்ட மாணவர்கள்
பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம், அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திற்கான தேர்வு பரீட்சையை இலங்கையில் நடத்தியது.
இந்த தேர்வு பரீட்சை மே மாதம் 29ம் திகதி முதல் ஜூன் 4 வரை நடைபெற்றுள்ளது.
தேர்வு பரீட்சை
புத்தளம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நாடளாவிய ரீதியில் இருந்து மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். மேலும், தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உயர் கல்வி ஆணையத்தின் தலைவரினால் வழங்கப்படும்.
புலமைப்பரிசில் விபரம்
பாடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை பொறுத்து, கல்வி நடவடிக்கைகள் இவ்வருட ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும்.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
பல்வேறு இனங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.