கடும் பொருளாதார நெருக்கடி! பாகிஸ்தானில் வரலாறு காணாதளவு விலைவாசி உயர்வு!
அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையினால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கமைய, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை,பழங்கள்,இறைச்சி, ஆகியவற்றின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி
பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் பாகிஸ்தானில் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கோரியுள்ளதுடன் கடன் மேலாண் திட்டம் ஒன்றையும் வகுத்து சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இருப்பினும், கடன் மேலாண் திட்டத்தை ஆய்வு செய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.