தேர்தல் நடத்த பணம் இல்லை! பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் தேர்தல் நடத்த நிதி அமைச்சகத்திடம் பணம் இல்லை என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலையில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவிக்காமல் அக்டோபர் வரை ஒத்திவைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பினை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
பொருளாதார முடக்கம்
மேலும், நாட்டில் தினம்தோறும் பிரச்சினைகளை உருவாக்குவதையே இம்ரான் கான் வேலையாக வைத்துள்ளதாகவும் இந்த சிக்கல்களில் இருந்து பாகிஸ்தான் விரைவில் மீண்டு வரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதன் காரணமா அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி, சர்வதேச கடன் சுமை போன்றவை பாகிஸ்தான் பொருளாதாரத்தை முடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.