கல்முனையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Ampara Crime Kalmunai
By Laksi Dec 26, 2024 05:30 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara )- கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (25) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கல்முனைக்குடி 02 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை

மேலதிக விசாரணை

அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 790 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்முனையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது | One Arrested In Kalmunai

இதனையடுத்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்களுடன் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்

அம்பாறையில் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery