திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அரசுடைமையாக்கும் திட்டத்தில் செந்தில் தொண்டமான்: சுகாஸ் பகிரங்கம்

Trincomalee Senthil Thondaman Eastern Province Northern Province of Sri Lanka
By Laksi Aug 13, 2024 02:47 PM GMT
Laksi

Laksi

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அரசுடைமையாக்கத் திட்டமிடும் கிழக்கின் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அடாவடிகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆலயச்செயற்பாடுகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமென்று கோருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை அவர் இன்று(13.08.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

தொடர் போராட்டங்கள்

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆளுநரின் அடாவடிகள் தொடர்ந்தால் வடக்குக் கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை இத்தால் சம்பந்தப்பட்டோருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அரசுடைமையாக்கும் திட்டத்தில் செந்தில் தொண்டமான்: சுகாஸ் பகிரங்கம் | North Will Not Amused By East Loss Sukhas Report

வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம். கிழக்கு பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என்பதை ஆளுநர் அறிவாராக! அரசின் எலும்புத் துண்டுகளுக்காக தமிழரின் வரலாற்று தொன்மைகளை சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலை கைவிடுமாறு கிழக்கின் ஆளுநரை கோருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இருவர் படுகாயம்

இஞ்சி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இஞ்சி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW