அரிசி தட்டுப்பாடு தொடர்பில் விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka
By Mayuri Aug 08, 2024 02:11 AM GMT

அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,

இம்முறை சிறுபோகத்தின் போது 2 மில்லியன் டொன் நெல் அறுவடை செய்யப்படும்.

நெற்செய்கை

4 இலட்சத்து 80,000 ஹெக்டயர் வயல் நிலப்பரப்பில் 77 சதவீதம் நாடு நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது.

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு | No Shortage Of Rice Department Of Agriculture

11 சதவீதம் சம்பா நெற்செய்கையும், 12 சதவீதம் கீரி நெற்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரும்போக நெல் அறுவடையும் நாட்டில் இருப்பதால் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW