இந்திய முட்டைகளை இலங்கையில் யாரும் வாங்க வேண்டாம்; வெளியானது எச்சரிக்கை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கெட்டுப்போயிருக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உண்ணக் கூடாது என சங்கத்தின் ஆலோசகர் திரு.மாதலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு சீல் உள்ளதால் எளிதில் அடையாளம் காண முடியும் என்று கூறும் அவர், இந்த முட்டைகள் பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்தால் அவற்றை வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறார்.
முட்டைகள் கெட்டுப்போன முட்டைகளாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், குளிர்சாதனப் பெட்டிகளில் குளிர்ந்த நிலையில் சேமிக்கப்படும் முட்டைகளை வெளியே எடுத்தவுடன் கெட்டுப்போகத் தொடங்கும் என்றும், சாதாரண சந்தை வெப்பநிலையில் முட்டைகளை வைத்திருந்தால் கெட்டுவிடும் என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்படும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை வெளியே எடுத்தது முதல் கெட்டுப் போகத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.