குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றெ நிகாத் சரீன்
ஐம்பது கிலோ எடையுள்ள பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கெடுத்துவந்த இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரீன் வியட்னாமின் டி டாம் என்ற பெண்ணை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.
நிகாத் சரீன் , நடந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் போட்டியை வென்று தனது இரண்டாவது உலக சாம்பியன் பட்டத்தை பெற்று பெயரை தக்க வைத்துள்ளார்.
இவர் பட்டம் வென்ற கையுடன் கிடைத்த பரிசுத்தொகையை வைத்து தனது பெற்றோர் இருவரையும் உம்ராவுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்றிருப்பதோடு அடுத்து தனது ஆசை ஏசியன் கேம்சிலும் ஒலிம்பிக்சிலும் இந்தியாவுக்காக கிண்ணம் வெல்வது என்றும் தெரிவித்துள்ளார்.