இஸ்ரோவின் அடுத்த முயற்சி
சந்திரயான் 3 ஐ அடுத்து, தமது கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
இதன்படி சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1விண்கலத்தை செப்டம்பர் 2ஆம் திகதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஆதித்யா விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020-ம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது.
அத்துடன் பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள்,ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.