பிரசவத்தின் போது தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம்

By Mayuri Apr 06, 2024 01:23 PM GMT

குழந்தை பிறக்கும் போது பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் மருத்துவமனையில் செயல்படுத்தப்படவுள்ளது.

காசல் மகளிர் மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்தார்.

மகப்பேறு அறையில் ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், பிரசவத்தின்போது கணவனுடன் தங்கிச் செல்லும் திட்டத்தின் மூலம் தாயால் குழந்தையை நல்ல மனநிலையில் பிரசவிக்க முடியும் எனத் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தாயின் வலியை இருவருக்குள்ளும் பகிர்ந்து கொள்ள உதவும் என்றும், கணவன்-மனைவி இடையேயான உறவும், பெற்றோர்-குழந்தை உறவும் வலுவடையும் என்றும் அவர் கூறினார்.