இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய ஓய்வூதிய முறை

Kalutara Sri Lanka Government Of Sri Lanka
By Fathima May 26, 2023 09:19 AM GMT

இலங்கையில் எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், பங்களிப்பு ஓய்வூதிய முறையையே அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.