புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விஷம் கலந்த ஐஸ்கிறீம்:இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

By Fathima Apr 01, 2023 12:21 AM GMT
Fathima

Fathima

புதிய சட்டமூலம் விஷம் கலந்த ஐஸ்கிறீம் ஆக இருக்குமா என்பதை கவனமாக அலசி ஆராய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலம்

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பயங்கரவாதத்தை தடுப்பதற்கான புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விஷம் கலந்த ஐஸ்கிறீம்:இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | New Anti Terrorism Act Imtiaz Baqir Makar

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு சர்வதேச ஜனநாயக அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே புதிய சட்டமூலத்தை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

தேர்தல் மூலம் மக்களின் கருத்து வெளிப்படுவதற்கான வழிகளை மூடுவதற்கு பல சூழ்ச்சிகள் நடத்தப்படும் தற்போதைய சூழலில் தேர்தலுக்கு அப்பால் அரசியலமைப்பு பிரகாரம் மக்களின் கருத்துக்கள் வெளிப்படும் ஏனைய வழிகளையும் புதிய சட்டமூலத்தின் ஊடாக மூடுவதற்கு முனைவதாகவே இந்த சட்டமூல ஷரத்துகளை ஆராயும் போது தெட்டத் தெளிவாக புலப்படுகிறது.

விஷம் கலந்த ஐஸ்கிறீம்

அத்துடன் அன்று முதல் இன்று வரை பல தடவைகள் பயங்கரவாத தடைச்சட்டத்தை தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக மாத்திரமே பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள்,பொதுக்கூட்டங்கள்,பேரணிகளை தடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த புதிய சட்டமூலம் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அழகிய வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டாலும் குறுகிய அரசியல் நோக்கில் ஜனநாயகத்தை அடக்குவதற்காக கொண்டுவரப்படும் விஷம் கலந்த ஐஸ்கிறீம் ஆக இருக்குமா என்பதை கவனமாக அலசி ஆராய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.