நிந்தவூரில் பராமரிப்பின்றி காணப்படும் பேருந்து நிறுத்த நிழல்குடை: பயணிகள் அசௌகரியம்

Ampara Sri Lankan Peoples Eastern Province
By Farook Sihan Jun 29, 2025 05:51 AM GMT
Farook Sihan

Farook Sihan

அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் காணப்படும் பேருந்து நிறுத்த நிழற்குடை உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நிழற்குடை நீண்ட காலமாக எவ்வித பராமரிப்பு இன்றியும் கூரை உட்பட அதன் இருக்கைகளும் சேதமடைந்து காணப்படுகிறது.

மோசடியாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்! வெளியான தகவல்

மோசடியாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்! வெளியான தகவல்

பயன்படுத்தப்படாத நிழற்குடை

அன்றாடம் தமது அடிப்படை தேவைகளுக்காக இந்த பேருந்து நிழற்குடை உள்ள இடத்தில் இருந்து பாடசாலை மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இவ்விடத்தினை பயன்படுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நிந்தவூரில் பராமரிப்பின்றி காணப்படும் பேருந்து நிறுத்த நிழல்குடை: பயணிகள் அசௌகரியம் | Neglected Bus Shelter Near Ninthavur Police

பிரதான வீதியில் அக்கரைப்பற்று கல்முனை பேருந்து வரும் வரை காத்திருக்கும் வேளைகளில் காகங்கள் மற்றும் இதர பறவைகளின் எச்சங்கள் விசப்பாம்புகளின் அச்சுறுத்தலும் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றதுடன் இன்று கூட இந்நிழற்குடையினை கால்நடைகளும் தங்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றன.

இதனால் பொதுமக்கள் குறித்த நிழற்குடை உள்ள இடத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளுவதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

தற்போது அதிக வெயில் காலம் என்பதனால் இதன் கூரைப்பகுதி மற்றும் நிழற்குடையின் சுற்றுச் சூழலை உடனடியாக திருத்தம் செய்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூலை முதல் பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

ஜூலை முதல் பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

மத்திய கிழக்கு பதற்றத்தின் மத்தியில் இலங்கை திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பதற்றத்தின் மத்தியில் இலங்கை திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery