சாய்ந்தமருது பிரதேசத்தில் தொற்றா நோய்ப் பரிசோதனை முன்னெடுப்பு

Sri Lankan Peoples Eastern Province Kalmunai Public Health Inspector
By Rakshana MA Apr 05, 2025 06:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது(Sainthamaruthu) பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கான தொற்றா நோய்ப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை நடவடிக்கையானது நேற்று(4) சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

பரிசோதனைகள்

இதன்போது 153க்கு மேற்பட்டவர்களுக்கு குருதிச் சீனி பரிசோதனை (Random Sugar Test) மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது பிரதேசத்தில் தொற்றா நோய்ப் பரிசோதனை முன்னெடுப்பு | Ncd Testing For Public In Sainthamaruthu

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரீன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டத் திருவிழா

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டத் திருவிழா

PTA-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

PTA-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery