ஆளுநர்கள் இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது: நஸீர் அஹமட்

By Fathima Apr 10, 2023 10:38 AM GMT
Fathima

Fathima

ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது என அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அகற்றப்பட்ட புன்னைக்குடா வீதி பெயர்ப்பலகையை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்து இனமுரண்பாடுகளை உருவாக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.

ஆளுநர்கள் இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது: நஸீர் அஹமட் | Nazir Ahmed

பெயர்ப் பலகை

ஆளுநரின் உத்தரவு வெளியானதை அடுத்து ஏற்கெனவே ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் அறிவித்தலாக அமைக்கப்பட்டிருந்த புன்னைக்குடா வீதி என்ற பெயர்ப் பலகை உடனடியாக அகற்றப்பட்டிருந்தது.

இந்த அறிவித்தல் வெளியாகி ஏறாவூரில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான நஸீர் அஹமட், பாரம்பரியமாக புன்னைக்குடா வீதி என இருந்து வரும் பெயரை எக்காரணம் கொண்டும் எவரையும் மாற்ற அனுமதிக்கப்போவதில்லை அத்தோடு, ஆளுநர் தனது அதிகார எல்லையை மீறுவதைக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.