பன்றி தீவனமாக பயன்படும் சேவல் குஞ்சுகள்: விவசாய அமைச்சகம்

Food Shortages Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Fathima Dec 12, 2023 11:04 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் வாரம் ஒன்றுக்கு 5,000க்கும் மேற்பட்ட சேவல் குஞ்சுகள், பன்றி தீவனத்திற்காக பயன்படுத்தப்படுவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் இந்த குஞ்சுகள் எந்தவிதமான தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை மாறாக பன்றிகளுக்கு உணவளிக்க, அவை பயன்படுத்தப்படுவதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தேசிய கால்நடை மேம்பாட்டு சபை 

பன்றி தீவனமாக பயன்படும் சேவல் குஞ்சுகள்: விவசாய அமைச்சகம் | National Animal Development Council Distribution

எனவே தற்போது தொழிலற்றவர்களுக்கு, இந்த குஞ்சுகளை இலவசமாக வழங்கி அவர்களின் நாளாந்த வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.

அதன்படி, இறைச்சிக்காக கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் குஞ்சுகளை விநியோகிக்க தேசிய கால்நடை மேம்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.