மொட்டுக்கட்சி இரண்டாக பிளவுபடும்!..பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை

Namal Rajapaksa Ranil Wickremesinghe Prasanna Ranatunga
By Independent Writer Apr 06, 2024 08:31 AM GMT
Independent Writer

Independent Writer

ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksha) களமிறக்க தீர்மானம் எடுத்தால் பொதுஜன பெரமுன கட்சி (SLPP) இரண்டாக பிளவுபடும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தற்போது பரிந்துரைக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர்களில் சவால்களை ஏற்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மட்டுமே ஆவார்.

மகிந்த கருத்து 

நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது என அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவே (Mahinda Rajapaksha) கூறியுள்ளார்.

மொட்டுக்கட்சி இரண்டாக பிளவுபடும்!..பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை | Namal Rajapaksha Presenditial Election 2024

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் நாமல் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

மொட்டுக்கட்சி இரண்டாக பிளவுபடும்!..பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை | Namal Rajapaksha Presenditial Election 2024

அவ்வாறானதொரு தீர்மானத்தை அவர் மேற்கொண்டால் கட்சி இரண்டாக பிளவுபடும்” என தெரிவித்துள்ளார்.