இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை: இந்திய நிதியமைச்சர் முக்கிய தகவல்

Smt Nirmala Sitharaman Pakistan India
By Fathima Apr 12, 2023 02:59 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு ஒருவார காலம் விஜயத்தை மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன், உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதிய கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது, பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இண்டர்நேஷனல் எகனாமிக்ஸ் (PIIE) (Peterson Institute for International Economics) தலைவர் ஆதம் எஸ் போஸன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை: இந்திய நிதியமைச்சர் முக்கிய தகவல் | Muslims Are Safer In India Than In Pakistan

தவறான தகவல்

மேலும் அவர் கூறியுள்ளதாவது, பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். உலகளவில் அதிக முஸ்லிம்களைக் கொண்ட 2ஆவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் வன்முறைக்கு ஆளாவதாக மேற்கத்திய நாடுகள் தவறான தகவலைப் பரப்பி வருகின்றன. அதில் உண்மையில்லை.

1947இல் இருந்ததைக் காட்டிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. மாறாகப் பாகிஸ்தானில்தான் சிறுபான்மையினரின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது.

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை: இந்திய நிதியமைச்சர் முக்கிய தகவல் | Muslims Are Safer In India Than In Pakistan

பாகிஸ்தானின் செயல்பாடு

சிறுபான்மையினர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், மரண தண்டனை கூட விதிக்கப்படுகிறது. பிரிவினையின்போது பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்தது.

அப்போது, சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் எனப் பாகிஸ்தான் உறுதியளித்தது. ஆனால், அதற்கு நேரெதிரான வகையில் தற்போது பாகிஸ்தானின் செயல்பாடு அமைந்துள்ளது.

அங்குள்ள சிறுபான்மையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட்டு அவர்கள் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதுடன் அவர்களின் வாழ்க்கை தரமும் மேம்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.