திருகோணமலையில் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பு அங்குரார்ப்பணம் வைபவம் (Photos)
திருகோணமலை- மூதூர் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பு அங்குரார்ப்பணம் வைபவம் மற்றும் இப்தார் நிகழ்வும் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மூதூர் முஸ்லிம் பெண்கள் தலைமையின் கீழ் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வை நேற்றைய தினம் (10.04.2023) மூதூர் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பில் உள்ள 170 பெண்கள் இணைந்து நடத்தியுள்ளனர்.
முஸ்லிம் பெண்களின் ஆளுமை விருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
நிர்வாக பிரதிநிதிகள்
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர், உதவி திட்டப் பணிப்பாளர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினர், மதகுருமார்கள், மொரவெவ, தம்பலகாமம், பட்டணமும் சூழலும் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கான சிவில் செயற்பாட்டு வலையமைப்பின் நிர்வாக பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இந்நிகழ்விற்கான அனுசரணை மற்றும் ஏற்பாட்டினை AHRC நிறுவனம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










