திருகோணமலை - அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்பு

Trincomalee Sri Lanka Police Investigation Udaipur Murder
By Nafeel Apr 15, 2023 02:09 PM GMT
Nafeel

Nafeel

திருகோணமலை - அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆண் நேற்றைய தினம் வீட்டிலிருந்து மாலை சென்றுள்ளதாகவும் அவர் இன்று(15) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாம்பல்தீவு - சல்லி வாட்டுபகுதியை சேர்ந்த 38 வயதுடைய ராஜலிங்கம் பிரபாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடற்கரையில் மீக்கப்பட்ட சடலத்தை நீதவான் பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளைவிடுத்துள்ளார்.

அத்துடன் சடலம் பிரேத பரிசோதனைகள் முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பவுள்ளது. மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.